இலைப்பொடி

தேவையானவை:

  • நரம்பு நீக்கிய எலுமிச்சை இலை,
  • நாரத்தை இலை, புளியங்கொழுந்து,
  • விளாங்கொழுந்து  (நான்கும்) தலா இரண்டு கைப்பிடி,
  • காய்ந்த மிளகாய்  ஒரு கப்,
  • பெருங்காயம்  சிறிதளவு,
  • உப்பு  தேவையான அளவு,
  • புளி  சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் புளியை சிறுதுண்டுகளாக்கிப் போட்டு வறுத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், உப்பு, புளி ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். இலை வகைகளை நன்கு இடித்துக் கொள்ளவும் (இடிக்கும் வசதி இல்லாதவர்கள், மிக்ஸியில் போட்டு சுற்றிக் கொள்ளவும்). பிறகு அத்துடன் மிளகாய் பொடித்ததையும் சேர்த்து நன்கு இடித்து, ஜாடியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நாக்குக்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *